கடைசி டி20 போட்டியில் இந்தியா போராடி தோல்வி : தொடரையும் இழந்தது…

இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான ஹாமில்டனில் இன்று நடைபெற்ற டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா 4 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்திடம் தோல்வி அடைந்தது. நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஏற்கனவே ஒருநாள் கிரிக்கெட் தொடரை 4-1 என்ற கணக்கில் வென்றுள்ளது. இந்நிலையில் இரு அணிகளும் மோதும் 3 போட்டிகளைக் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் கடைசி ஆட்டம் இன்று நடைபெற்றது.

டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீசியது. இதனையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் எடுத்தது. 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என கடின இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி ஒரு கட்டத்தில் அடுத்தடுத்த விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இறுதியில், இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. இதனையடுத்து 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரை நியூசிலாந்து 2-1 என கணக்கில் வென்றது.

Exit mobile version