4வது டி20 போட்டியில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் இன்று மோதல்

இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 4-வது டி20 போட்டி வெலிங்டனில் இன்று நடைபெறுகிறது.

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, முதலில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில், முதல் மூன்று போட்டிகளையும் வென்ற இந்திய அணி, நியூசிலாந்து மண்ணில் முதன் முறையாக தொடைரையும் கைப்பற்றி அசத்தியது. இந்நிலையில் இவ்விரு அணிகள் மோதும் 4-வது டி20 போட்டி வெலிங்டனில் இன்று நடைபெறுகிறது.

சொந்த மண்ணில் டி20 தொடரை இழந்ததால், மீதமுள்ள இரண்டு போட்டிகளிலும் ஆறுதல் வெற்றி பெற நியூசிலாந்து அணி முயிற்சி மேற்கொள்ளும் எனத் தெரிகிறது. அதே சமயம், டி20 தொடரை கைப்பற்றிய இந்திய அணி, மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளித்து, இளம் வீரர்களுக்கு இன்றைய போட்டியில் விளையாட வாய்ப்பு அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இளம் வீரர்களான சஞ்சு சாம்சன், சாய்னி, வாஷிங்டன் சுந்தர் ஆகியோருக்கு அணி நிர்வாகம் இன்றைய போட்டியில் விளையாட வாய்ப்பு அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version