2வது ஒருநாள் போட்டி: நியூசிலாந்திற்கு இந்தியா 325 ரன்கள் இலக்கு

இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு 325 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. முன்னதாக டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி களமிறங்கிய இந்திய அணியின் ரோஹித் சர்மா (87 ரன்கள்), தவான் (66 ரன்கள்) ஜோடி சிறப்பான தொடக்கத்தை அளித்தது. இதனையடுத்து இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 324 ரன்கள் எடுத்தது.

Exit mobile version