இந்தியா- நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான ஆட்டம் மழையால் ரத்து

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில், இந்தியா- நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான 18வது லீக் போட்டி, மழையால் ரத்து செய்யப்பட்டதால், ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். 12வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. வியாழனன்று இந்தியா-நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான போட்டி நடைபெற இருந்தது. இந்த நிலையில், நாட்டிங்ஹாமில் நடைபெற இருந்த இந்த போட்டியானது மழையால் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மழையால் போட்டி ரத்து செய்யப்பட்டதை அடுத்து, இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.

இதையடுத்து இந்த போட்டியையும் சேர்த்து , 4 போட்டிகளில் இருந்து பெற்ற 7 புள்ளிகளுடன் நியூஸிலாந்து அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. 3 போட்டிகளில் பெற்ற 5 புள்ளிகளுடன் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. உலக கோப்பை பயிற்சி ஆட்டத்தில் தோற்கடித்த நியூஸிலாந்து அணியை இன்றைய போட்டியில் வென்று, இந்தியா பதில் அடி கொடுக்கும் என எதிர்பார்த்த இந்திய ரசிகர்களுக்கு, போட்டி ரத்து செய்யப்பட்டது ஏமாற்றத்தை அளித்துள்ளது.

Exit mobile version