இந்தியா-தென்னாப்பிரிக்கா இடையிலான பிரதிநிதிகள் கூட்டம்

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையிலான பிரதிநிதிகள் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி மற்றும் தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா கலந்து கொண்டனர். மேலும் இரு நாடுகளின் வெளியுறவுத்துறை அதிகாரிகளும் பங்கேற்றனர். இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜூம் கூட்டத்தில் கலந்து கொண்டார். கூட்டத்தில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையிலான பாதுகாப்பு, வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் இருநாட்டு ஒத்துழைப்பு குறித்து விவாதிக்கப்பட்டது.

Exit mobile version