இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் நாளை தொடக்கம்

இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நாளை தொடங்குகிறது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்கா அணி, இருபது ஓவர், ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில், 3 போட்டிகள் கொண்ட இருபது ஓவர் தொடர் சமனில் முடிவடைந்தது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் தொடர் விசாகப்பட்டினத்தில் நாளை தொடங்குகிறது. இந்த டெஸ்ட் தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கணக்கில் வருவதால் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. வெற்றியுடன் டெஸ்ட் தொடரை தொடங்கும் முனைப்பில் இரு அணி வீரர்களும் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் ரோகித் சர்மா முதல் முறையாக தொடக்க வீரராக களமிறங்குகிறார். பயிற்சி ஆட்டத்தில் டக் அவுட் ஆகி சொதப்பியதால், ரோகித் சர்மா கடும் நெருக்கடியை சந்தித்து வருகிறார். முதல் டெஸ்ட் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறும் பட்சத்தில் அணியில் இருந்து ரோகித் சர்மா கழட்டி விடப்பட வாய்ப்பு அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் முதல் டெஸ்ட் போட்டியில் தனது திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்திற்கு அவர் தள்ளப்பட்டுள்ளார்.

Exit mobile version