மருத்துவ உபகரண பொருட்களை மாலத்தீவிற்கு அனுப்புகிறது இந்தியா

மாலத்தீவில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில், இந்தியாவிலிருந்து மருத்துவ உபகரணங்கள் விமானப்படையின் விமானம் மூலம் அனுப்பிவைக்கப்பட இருக்கிறது.  இதுதொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனாவிற்கு உதவும் வகையில் மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு நிவாரண பொருட்கள் மாலத்தீவிற்கு அனுப்பப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்திய விமானப்படையின் C -130J ரக சூப்பர் ஹெர்குலஸ் விமானம் மூலம் மருத்துவ உபகரணங்கள் மற்றும் நிவாரணப் பொருட்கள் அனுப்பப்பட இருக்கிறது. கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் அண்டை நாடுகளுக்கு உதவும் வகையில் இந்த நிவாரண பொருட்கள் அனுப்பப்பட இருப்பதாக மத்திய அரசு அறிக்கையில் விளக்கம் அளித்துள்ளது.

Exit mobile version