கர்தார்பூர் வழித்தட பணிகள் தொடர்பாக இந்தியா-பாகிஸ்தான் நாளை பேச்சுவார்த்தை

இந்தியா – பாகிஸ்தான் இடையே கர்தார்பூர் வழித்தட கட்டுமானப் பணிகள் தொடர்பாக, இரு நாட்டு அதிகாரிகள் இடையேயான கூட்டம் நாளை நடைபெறுகிறது.

வாகா – அட்டாரி எல்லை பகுதியில், இந்திய பகுதிக்குட்பட்ட அட்டாரியில் இந்த கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் பாகிஸ்தான் சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் முகமது ஃபைசல் தலைமையிலான குழு பங்கேற்கிறது. இது குறித்த பாகிஸ்தான் நேற்று வெளிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஜூலையில் நடந்த பேச்சுவார்த்தையில் ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த வெள்ளிக்கிழமை இரு நாடுகளிடையே கர்தார்பூர் வழித்தடம் அமைப்பது தொடர்பாக இரு நாட்டு தொழில் துறை நிபுணர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த விவகாரத்தில் இரு நாடுகளுக்கு இடையே நடைபெறும் மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version