இந்தியா – நியூசிலாந்து இடையேயான 2வது டி20 போட்டி இன்று தொடக்கம்

இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20  கிரிக்கெட் போட்டி இன்று ஆக்லாந்தில் நடைபெறுகிறது

இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையே நடந்த முதலாவது 20 ஓவர் போட்டியில் இந்திய அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. நியூசிலாந்து அணி நிர்ணயித்த 219 ரன்களை எடுக்க முடியாமல் இந்திய வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். இந்திய அணியில் அதிக பட்சமாக தோனி 39 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால் 139 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது. இந்த நிலையில் மூன்று போட்டிகளை கொண்ட இருபது ஓவர் தொடரில் இன்று இரண்டாவது ஆட்டம் ஆக்லாந்தில்  நடைபெறுகிறது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. அதே நேரம் இந்த போட்டியில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றும் நோக்கத்தில் உத்வேகத்துடன் ஆட நியூசிலாந்து வீரர்கள் தயாராகி வருகின்றனர்.

Exit mobile version