இந்தியா தனது விமான சேவையை தொடங்க முன்வர வேண்டும் : இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சேனாதிராஜா

இந்தியா தனது விமான சேவையை தொடங்க முன்வர வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சேனாதிராஜா கேட்டுக்கொண்டுள்ளார். இலங்கை நாடாளுமன்றத்தில் பட்ஜெட் குறித்து விவாதிக்கப்பட்டது. அதில் போக்குவரத்து தொடர்பான நிதி ஒதுக்கீடு குறித்தும் விவாதிக்கப்பட்டது.

அப்போது பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் சேனாதிராஜா, அடுத்த மாதம் துவங்கவுள்ள பலாலி விமான நிலைய சேவைகளை துவங்க இந்தியா முன்வந்ததாகவும், பல்வேறு பிரச்சனைகள் காரணமாக அது தள்ளிப்போனதாகவும் கூறினார். எனவே, மிக விரைவில் இந்தியா தனது விமான சேவைகளை ஆரம்பிக்க முன்வர வேண்டும் என சேனாதிராஜா கேட்டுக்கொண்டார்.

Exit mobile version