இந்தியா – மேற்கிந்திய தீவுகள் போட்டியில் இந்தியா முன்னிலை

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 2வது இன்னிங்க்சில் இந்தியா 260 ரண்கள் முன்னிலை பெற்றுள்ளது.

இந்தியா-மேற்கிந்திய தீவுகள் இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆண்டிகுவாவில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் இன்னிங்க்ஸில் களமிறங்கிய இந்திய அணி 297 ரன்கள் எடுத்தது. இதனை தொடர்ந்து களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி தனது முதல் இன்னிங்க்ஸில் 222 ரன்கள் எடுத்தது.

இதனையடுத்து 75 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்க்ஸில் களமிறங்கிய இந்திய அணி மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விகெட் இழப்பிற்கு 72 ஓவர்களில் 185 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளது.

இதன் மூலம் இந்திய அணி மொத்தமாக 260 ரன்களுடன் முன்னிலையில் உள்ளது. இந்திய அணி சார்பாக இரண்டாவது இன்னிங்க்ஸில் கோலி மற்றும் ரஹானே ஆகியோர் அரை சதம் அடித்து களத்தில் உள்ளனர்.

Exit mobile version