எதிரிகளுக்கு பதிலடி கொடுக்கும் வலிமையான நாடு இந்தியாவும் இணைந்துள்ளது -மத்திய அமைச்சர் அமித்ஷா

எதிரிகளுக்கு பதிலடி கொடுக்கும் வலிமையான நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இணைந்துள்ளதாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பெருமிதம் தெரிவித்துள்ளார்.  

மேற்கு வங்க மாநிலம் ராஜர்ஹாட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள தேசிய பாதுகாப்பு படை விரிவாக்க கட்டடத்தை மத்திய அமைச்சர் அமித்ஷா திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து பாதுகாப்பு படை வீரர்கள் சார்பில் நடைபெற்ற தீவிரவாத தடுப்பு ஒத்திகையை அவர் பார்வையிட்டார்.

Exit mobile version