இந்தியா ரஷ்ய ராணுவத்தினர் போர் ஒத்திகை

உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சியில் நடைபெற்று வரும் கூட்டுப் பயிற்சியில் இந்தியா ரஷ்ய ராணுவத்தினர் போர் ஒத்திகையில் ஈடுபட்டனர்

இந்தியா ரஷ்ய ராணுவத்தினர் இணைந்து ஆண்டுதோறும் கூட்டுப்பயிற்சியில் ஈடுபடுவது வழக்கம். இந்த ஆண்டு உத்திரப்பிரதேச மாநிலம் ஜான்சி, புனே மற்றும் கோவா ஆகிய நகரங்களில் இரு நாட்டு ராணுவ வீரர்களும் பயிற்சி செய்து வருகின்றனர். இந்திரா என்ற பெயரில் பயிற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருநாடுகளின் போர்க்கப்பல்கள், விமானங்கள் மற்றும் தரைப்படையினரும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் ஜான்சியில் இருநாட்டுத் தரைப்படையினரும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். இருநாடுகளின் வலிமையை பறைசாற்றும் விதமாக ஒத்திகை அமைந்திருந்தது.

Exit mobile version