இந்தியாவில் இதுவரை 75,60,000 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது!

இந்தியாவில் இதுவரை 75 லட்சத்து 60 ஆயிரம் கொரோனா மாதிரி பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக ICMR தெரிவித்துள்ளது.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் இதுவரை 4 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 14 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்து உள்ளனர். இதையடுத்து, கொரோனா பரிசோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அந்த வரிசையில், இந்தியாவில் இதுவரை 75 லட்சத்து 60 ஆயிரம் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளதாக ICMR தெரிவித்துள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில், 2 லட்சத்து 7 ஆயிரம் மாதிகள் சோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் ICMR கூறியுள்ளது.

Exit mobile version