உலக புலிகளின் எண்ணிக்கையில் 70 % இந்தியாவில் உள்ளது: தலைமை வழக்கறிஞர் தகவல் !

உச்சநிதிமன்றத்தில், வழக்கு ஒன்றில் மத்திய அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பாடி, நாடு முழுவதும் உள்ள புலிகளின் எண்ணிக்கையைப் பற்றி 2018 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி, 53 புலிகள் காப்பகங்களில் 2 ஆயிரத்து 967 புலிகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதன் மூலம் உலக புலிகளின் எண்ணிக்கையில் 70 சதவிகிதத்திற்கும் அதிகமாகமானவை இந்தியாவில் இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் மூலம் புலிகளை அழிவின் விளிம்பில் இருந்து மீட்பதற்கு, எடுக்கப்பட்ட முயற்சிகள் நல்ல பலனைக் கொடுத்துள்ளதாக தெரிவித்த அவர், நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அகில இந்திய அளவிலான, புலிகள் கணக்கெடுப்பில் இது உறுதி படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

Exit mobile version