இந்தியாவில் ஒரேநாளில் 24,248 பேருக்கு கொரோனா பாதிப்பு!!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், 24 ஆயிரத்து 248 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6 லட்சத்து 97 ஆயிரத்து 413 ஆக உயர்ந்துள்ளது. 2 லட்சத்து 53 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும், 4 லட்சத்து 24 ஆயிரத்து 433 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக உள்ள மகாராஷ்டிராவில், பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்து 6 ஆயிரத்து 619 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 1 லட்சத்து 11 ஆயிரத்து 151 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 62 ஆயிரத்து 778 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். டெல்லியில், 99 ஆயிரத்து 444 பேரும், குஜராத்தில் 36 ஆயிரத்து 37 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 27 ஆயிரத்து 707 பேரும் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். மேற்கு வங்கத்தில் 22 ஆயிரத்து 126 பேரும், இதேபோல், தெலங்கானா, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களிலும் பாதிப்பு அதிகமாக உள்ளது.

 

 

 

Exit mobile version