இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான கடைசி டெஸ்ட் போட்டி நாளை தொடக்கம்

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான 4வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நாளை தொடங்குகிறது.

இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. அடிலெய்டில் நடந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் 31 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. தொடர்ந்து பெர்த்தில் நடைபெற்ற 2 வது போட்டியில், 146 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவும், மெல்பர்னில் நடந்த 3 வது போட்டியில், 137 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவும் வெற்றி பெற்றது. இதனால் 2 க்கு 1  என்ற கணக்கில் இந்திய அணி தொடரில் முன்னிலை வகிக்கிறது.

தொடரில் பின்தங்கியுள்ளதால் அஸ்திரேலிய அணிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. தொடரை இழக்காமல் இருக்க இப்போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்நிலையில், இரு அணிகளுக்குமிடையேயான 4 வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நாளை தொடங்குகிறது. தொடரை வென்று சாதனை படைக்கும் நோக்கில் இந்தியாவும், தொடரை சமன் செய்ய ஆஸ்திரேலியாவும் கடுமையாக போராடும் என்பதால் இப்போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version