சீனாவிற்கு மருத்துவப் பொருட்களை ஏற்றுமதி செய்ய இந்தியா தடை

சீனாவிற்கு மருத்துவப் பொருட்களை ஏற்றுமதி செய்ய இந்தியா தடை விதித்துள்ளது.

இதுதொடர்பாக டெல்லி செய்தியாளர்களை சந்தித்த இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார், உலக சுகாதார வழிகாட்டுதல் படி சீனாவிற்கு மருத்துவ பொருட்களை ஏற்றுமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

 கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் இந்திய அரசு தீவிரம் காட்டி வருவதாக கூறிய அவர், கொரோனாவை எதிர்கொள்ள தேவையான மருத்துவ பொருட்களை கையிருப்பில் வைத்துக் கொள்வது அவசியமாகிறது என்று கருத்து தெரிவித்தார்.

அதன் காரணமாகவே, சீனாவிற்கு மருத்துவ பொருட்களை ஏற்றுமதி செய்ய இந்தியா தடை விதித்துள்ளது என்றும் அவர் விளக்கம் அளித்தார். இதனால், இந்தியாவில் மிகப்பெரிய அபாயம் தவிர்க்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

Exit mobile version