இந்தியா- வங்கதேச அணிகள் மோதும் கடைசி டி20 போட்டி நாக்பூரில் இன்று நடைபெறுகிறது…!

இந்தியா – வங்கதேச அணிகளுக்கு இடையேயான மூன்று 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நாக்பூரில் இன்று நடைபெறுகிறது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி, மூன்று 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணியும், 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்றது. இந்த நிலையில், மூன்றாவது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டனர். இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரை வெல்லும் என்பதால், இன்றைய போட்டி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

Exit mobile version