இந்தியா – ஆஸ்திரேலியா இரண்டாம் ஒருநாள் போட்டி ராஜ்கோட்டில் இன்று நடைபெறுகிறது.

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ராஜ்கோட்டில் இன்று நடைபெறுகிறது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ராஜ்கோட்டில் இன்று நடைபெறுகிறது. முதல் போட்டியில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய அணி வீரர்கள் தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டனர். ஆஸ்திரேலிய அணி பேட்டிங் மற்றும் பவுலிங்கில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அந்த அணியின் பந்துவீச்சாளர்கள், முதல் போட்டியில் துல்லியமாக பந்துவீசி இந்திய அணிக்கு கடும் சவால் கொடுத்தனர். இந்திய அணி தனது முழு திறமையை வெளிப்படுத்தினால் மட்டுமே வலுவான ஆஸ்திரேலிய அணியை வீழ்த்த முடியும். இன்றைய போட்டியில் ரிஷப் பண்ட்டிற்கு பதிலாக மணிஷ் பாண்டே அல்லது கேதர் ஜாதவ் களமிறங்குவார்கள் எனத் தெரிகிறது.

Exit mobile version