இந்தியா – மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதும் 2வது டி20 போட்டி இன்று தொடக்கம்

இந்தியா – மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதும் 2வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி, திருவனந்தபுரம் கிரீன்பீல்டு சர்வதேச மைதானத்தில் இன்று தொடங்குகிறது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி தலா மூன்று 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது.

ஐதராபாத்தில் நடந்த முதல் 20 ஓவர் போட்டியில், இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்று முன்னிலை பெற்றது. இந்தியா 1க்கு பூஜ்யம் என முன்னிலை வகிக்க, 2வது போட்டி திருவனந்தபுரத்தில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது.

இந்த போட்டியில் வென்று, தொடரை கைப்பற்றும் முனைப்புடன் இந்திய அணி களமிறங்குகிறது. முதல் போட்டியில் அடைந்த தோல்விக்கு பதிலடி தந்து, தொடரை வெல்லும் வாய்ப்பை தக்கவைத்துக் கொள்ளும் முனைப்பில், மேற்கிந்திய தீவுகள் அணியும் உள்ளதால், இன்றைய ஆட்டத்தை ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Exit mobile version