திருச்சி காவல் நிலையத்தில் அநாகரிக செயல் – சி.சி.டி.வி. வீடியோ காட்சிகளால் பரபரப்பு

திருச்சியில் காவல் நிலையத்தில் பெண் காவலரிடம் அத்துமீறிய காவல் உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
திருச்சி சோமரசம்பேட்டை காவல் நிலையத்தில் சிறப்பு உதவி காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் பாலசுப்பிரமணியன். அதே காவல்நிலையத்தில் பணியாற்றும் பெண் காவலர் அளித்த பாலியல் புகாரால் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில், பாலசுப்பிரமணியின், புகார் அளித்த பெண் காவலரிடம் அத்துமீறும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி இருக்கிறது. கடந்த 10 ஆம் தேதி இருவரும் இரவு பணியில் இருந்தபோது இந்தச் சம்பவம் நடந்திருக்கிறது. இதுதொடர்பாக 2 நிமிடம் 50 வினாடிகள் உள்ள வீடியோ காட்சிகள் காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

 

 

 

Exit mobile version