அபுதாபியில் அதிகரிக்கும் கொரோனா பரவல்; ஐ.பி.எல் தொடருக்கு புதிய சிக்கல்!

அபுதாபியில் அதிகரிக்கும் கொரோனா பரவல் காரணமாக ஐ.பி.எல் தொடரின் போட்டிகளின் எண்ணிக்கை குறைய வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா பரவல் காரணமாக இந்தாண்டு ஐ.பி.எல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் 19ம் தேதி முதல் தொடங்க இருக்கிறது.

இந்தநிலையில், போட்டிக்கான அட்டவணையை ஐ.பி.எல் நிர்வாகம் இன்னும் வெளியிடாமல் உள்ளது. மேலும், அபுதாபியில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் 20 போட்டிகளை குறைக்க ஐ.பி.எல் நிர்வாகம் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

 

Exit mobile version