பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 6,429 கனஅடியாக அதிகரித்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமான பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 3 ஆயிரத்து 362 கனஅடியாக இருந்தது. இந்தநிலையில் இன்று காலை நீர்வரத்து 6 ஆயிரத்து 429 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 96.51 அடியாகவும், நீர் இருப்பு 26 டிஎம்சியாகவும் உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் பவானி ஆற்றில் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது.

Exit mobile version