இந்தியாவில் ஒமிக்ரான் தொற்று பாதிப்பு 415ஆக அதிகரிப்பு

இந்தியாவில் வேகமெடுத்துள்ள ஒமிக்ரான் தொற்றால், அதன் மொத்த பாதிப்பு 400-ஐ தாண்டியுள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் 57 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 108 பேருக்கும், டெல்லியில் 79 பேருக்கும், குஜராத்தில் 43 பேருக்கும் ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தெலங்கானாவில் 38 பேரும், கேரளாவில் 37 பேரும் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அடுத்தப்படியாக ஆறாவது இடத்தை பிடித்துள்ள தமிழ்நாட்டில் 34 பேர் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கர்நாடகாவில் 31 பேருக்கும், ராஜஸ்தானில் 22 பேருக்கும், அரியானா, ஒடிசா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் தலா 4 பேருக்கும், ஜம்மு காஷ்மீர், மேற்கு வங்கம் மாநிலங்களில் தலா மூவருக்கும், ஒமிக்ரான் கண்டறியப்பட்டுள்ளது.

உத்தரபிரதேசத்தில் இருவரும், பஞ்சாப், லடாக், உத்தரகாண்டில் தலா ஒருவரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட 415 நோயாளிகளில் 157 பேர் குணமடைந்தனர்.

இதனிடையே, இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 7 ஆயிரத்து 189 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் 387 பேர் உயிரிழந்த நிலையில், 7ஆயிரத்து 286 பேர் குணமடைந்தனர்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 77 ஆயிரத்து 32 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Exit mobile version