மகாராஷ்டிராவில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு!!

மும்பை மாநகராட்சி பகுதியில் மட்டும் நேற்று ஒரே நாளில் 25 பேர் பலியான நிலையில், 998 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. மும்பையில் மட்டும் இதுவரை 16 ஆயிரத்து 579 பேர் கொரோனா வைரஸ் தொற்று ஆளாகியுள்ளனர். ஒட்டுமொத்தமாக மாநில அளவில் நேற்று ஆயிரத்து 602 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டதால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 27 ஆயிரத்து 524ஆக அதிகரித்துள்ளது. எனினும் ஆறாயிரத்து 59 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக, மகாராஷ்டிரா சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Exit mobile version