கனமழையால், பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து 17,000 கன அடியாக அதிகரிப்பு

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக, தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து 17 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் அளவு அதிகரித்துள்ளதால், கர்நாடக அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. இதனால், பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து 17 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. ஒகேனக்கலுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால், அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 8 ஆயிரத்து 347 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 113.03 அடியாகவும், நீர் இருப்பு 82.787 டி.எம்.சியாகவும் உள்ளது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக 5 ஆயிரம் கன அடி நீரும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்காக 500 கன அடி நீரும் வெளியேற்றப்படுகிறது.

Exit mobile version