கெலவரப்பள்ளி அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரிப்பு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கெலவரப்பள்ளி நீர்தேக்க அணைக்கு, வரும் நீரின் அளவு 560 கனஅடியாக அதிகரித்துள்ளது.

நந்திமலை உள்ளிட்ட நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை மற்றும் ஓசூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 400 கனஅடியாக இருந்த நிலையில், முழுக்கொள்ளவான 44.28 அடியில் 41.82 அடி வரை நீர் நிரம்பி உள்ளது. நேற்றைய வரத்தை விட 160 கன அடிநீர் அதிகரித்து நீர்வரத்து, 560 கனஅடியாக உள்ளது. அணைக்கு வரும் நீர் முழுமையாக தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.

Exit mobile version