15 சுங்கச் சாவடிகளின் கட்டணம் 3% உயர்வு

தேசிய நெடுஞ்சாலைத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் 15 சுங்கச் சாவடிகளின் கட்டணம் 3 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மொத்தம் 46 சுங்கச் சாவடிகள், தேசிய நெடுஞ்சாலைத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன. இவற்றில் நல்லூர், பாளையம், வைகுந்தம், எலியார்பத்தி, கொடை ரோடு, மேட்டுப்பட்டி, விக்கிரவாண்டி, பொன்னம்பலப்பட்ட உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ள 15 சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயர்தப்பட்டுள்ளது.

இந்த கட்டண உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி 52 கிலோ மீட்டருக்குள் பயணிக்கும் இலகு ரக வாகனங்களுக்கு ஒரு முறை சென்று வர 60 ரூபாய் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பேருந்துகளுக்கு 195 ரூபாய் மற்றும் கட்டுமான பொருட்களை ஏற்றி செல்லும் வாகனங்களுக்கு 305 ரூபாய் கட்டணாம நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Exit mobile version