பாலருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளநிலையில், பாலருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது.

கேரள மாநிலத்தில் தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையையொட்டியுள்ள பகுதிகளில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து கனமழை பெய்தது.

இதனால் தமிழக- கேரள எல்லையில் அமைந்துள்ள ஆரியங்காவில் உள்ள பாலருவியில் நீர்வரத்து அதிகரித்து, கடந்த வாரம் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக 5 நாட்கள் பாலருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க கேரள வனத்துறை தடை விதித்தது. இந்த தடை அண்மையில் விலக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் பாலருவியில் தற்போது உற்சாகமாய் குளித்து வருகின்றனர்.

இந்தநிலையில் விடுமுறை தினம் என்பதால் குற்றாலத்துக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் பாலருவியில் குளிப்பதற்காக குடும்பத்துடன் படையெடுத்தனர். இதனால் பாலருவியில் வழக்கத்தை விட சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலை மோதியது. நீண்ட நேரம் காத்திருந்து சுற்றுலா பயணிகளிள் அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.

Exit mobile version