நெல்லையில் தசரா வேடப் பொருட்களின் விற்பனை அதிகரிப்பு

தசரா திருவிழாவை முன்னிட்டு நெல்லை மாவட்டம் திசையன்விளையில் வேடப் பொருட்களின் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.

குலசேகரப்பட்டிணம் தசரா திருவிழாவில் வேடமணியும் பக்தர்களுக்காக விதவிதமான வேடப்பொருட்கள், நெல்லை மாவட்டம் திசையன்விளையில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது. மைசூருக்கு அடுத்தப்படியாக தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டிணத்தில் தசரா திருவிழா ஆண்டுதோறும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான தசரா திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்நிலையில், நெல்லை மாவட்டம் திசையன்விளைவில் சுடலைமாட சுவாமி, அம்மன் உள்ளிட்ட உருவங்களை கொண்ட முகமூடிகள் அவற்றுக்கு தேவையான கிரீடம், ராட்சத கைகள் ஆகியவைகளை பக்தர்கள் வாங்கிச் செல்கின்றனர்.

Exit mobile version