இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் பாதிப்பு!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6 ஆயிரத்து 535 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில், பாதிப்பு எண்ணிக்கை ஒரு  லட்சத்து 45 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

மகாராஷ்டிராவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 52 ஆயிரத்து 667ஆக உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் 17 ஆயிரத்து 82 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 8 ஆயிரத்து 731 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். குஜராத்தில் 14 ஆயிரத்து 460 பேரும், டெல்லியில் 14 ஆயிரத்து 53 பேரும், ராஜஸ்தானில் 7 ஆயிரத்து 300 பேரும் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். மத்தியப் பிரதேசத்தில் 6 ஆயிரத்து 859 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 6 ஆயிரத்து 532 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோன்று, மேற்கு வங்கம், ஆந்திரா, பீகார் போன்ற மாநிலங்களிலும் பாதிப்பு அதிகமாக உள்ளது. இந்தியாவில் இதுவரை 60 ஆயிரத்து 491 பேர் குணமடைந்துள்ளனர். நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 146 பேர் உயிரிழந்த நிலையில், பலி  எண்ணிக்கை 4 ஆயிரத்து 167ஆக அதிகரித்துள்ளது.

Exit mobile version