சென்னையில் தங்கத்தின் விலை உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் சவரனுக்கு விலை 96 ரூபாய் உயர்ந்து 30 ஆயிரத்து 24 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தின் விலையானது தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், புதிய உச்சமாக நேற்று 30 ஆயிரம் ரூபாயை கடந்தது. இந்தநிலையில், சென்னையில் 24 காரட் தங்கம் கிராமுக்கு நேற்றைய விலையான 3 ஆயிரத்து 898 ரூபாயிலிருந்து 12 ரூபாய் அதிகரித்து 3 ஆயிரத்து 910 ரூபாய்க்கும், ஒரு சவரன் 96 ரூபாய் அதிகரித்து 31 ஆயிரத்து 280 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

22 காரட் ஆபரணத்தங்கம் கிராமிற்கு நேற்றைய விலையான 3 ஆயிரத்து 741 ரூபாயிலிருந்து 12 ரூபாய் அதிகரித்து 3 ஆயிரத்து 753 ரூபாய்க்கும், ஒரு சவரன் 96 ரூபாய் அதிகரித்து 30 ஆயிரத்து 24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியை பொறுத்தவரை நேற்றைய விலையிலிருந்து கிராமிற்கு 20 காசுகள் அதிகரித்து 54 ரூபாய் 80 காசுகளிலிருந்து 55 ரூபாயாக அதிகரித்துள்ளது. ஒரு கிலோ பார் வெள்ளி 200 ரூபாய் அதிகரித்து 55 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

 

Exit mobile version