வேலம்மாள் கல்வி நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை

வேலம்மாள் கல்வி குழுமத்திற்குச் சொந்தமான 50 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னை மற்றும் மதுரையில் வேலம்மாள் கல்வி குழுமத்துக்குச் சொந்தமாக ஏராளமான கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தொடர்ந்து இந்த நிறுவனங்கள் மீது வரி ஏய்ப்பு புகார்கள் வந்ததாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து இன்று காலை வருமானவரித்துறை அதிகாரிகள், வேலம்மாள் கல்வி குழுமத்துக்குச் சொந்தமான கல்வி நிறுவனங்களில் சோதனையில் இறங்கினர். காலையில் ஆரம்பித்த வருமானவரி சோதனை தற்போது வரை நீடித்து வருகிறது. மதுரை மற்றும் சென்னையில்  வேலம்மாள் கல்விக் குழுமத்துக்குச் சொந்தமான 50 இடங்களில் இந்த வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Exit mobile version