ஸ்ரீராம் பட்டு சேலை விற்பனை நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை

ஆரணியில் உள்ள ஸ்ரீராம் பட்டு சேலை விற்பனை நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

 ஆரணி, வேலூர், சென்னை  உள்ளிட்ட  16 இடங்களில்  ஸ்ரீராம் குழுமத்தின் 16 பட்டு சேலை விற்பனை நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். ஸ்ரீராம் குழுமத்திற்கு சொந்தமான திருமண மண்டபம் மற்றும் அரிசி ஆலைகளிலும் 40க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆயினும், சோதனை முடிந்த பிறகே முழுமையாக தகவல்கள் வெளியாகும் என வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version