தனியார் மதுபான ஆலையில் வருமான வரித்துறை சோதனை –  ரூ.40 கோடி ரொக்கம் பறிமுதல்

பூந்தமல்லி அருகே தனியார் மதுபான ஆலையில் விடிய விடிய நடத்தப்பட்ட வருமான வரிசோதனையில் கணக்கில் வராத 40 கோடி ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னை அடுத்த பூந்தமல்லியில் தனியாருக்கு சொந்தமான மதுபான ஆலை செயல்பட்டு வருகிறது. ஆலை நிர்வாகத்தின் மீது வரி ஏய்ப்பு புகார் வந்ததையடுத்து, நேற்று பிற்பகல் முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

சென்னையில் 40 இடங்களில் 2 வது நாளாக வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தியாகராயநகர், பூந்தமல்லி உள்ளிட்ட இடங்களில் விடியவிடிய நடத்தப்பட்ட சோதனையில், கணக்கில் வராத 40 கோடி ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மதுபான ஆலைக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் அதிகாரிகள் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.

 

 

Exit mobile version