திருவண்ணாமலையில் பிரபல நகைக்கடையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை

திருவண்ணாமலையில் பிரபல நகைக்கடை தொழிலதிபரின் வீடு மற்றும் கடையில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தியதில் முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. திருவண்ணாமலை ஐயங்களை தெருவில் வசித்து வருபவர் பிரபல தொழிலதிபர் கமல் சந்த். ஜெயின் தேரடி வீதியில் பிரபல நகை கடை மற்றும் அடகு கடை நடத்தி வரும் இவர், பைனான்ஸ், ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் செய்து வருகிறார். இந்நிலையில், வரி ஏய்ப்பு நடந்து இருப்பதாக வருமான வரித் துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதனடிப்படையில், வருமான வரித்துறை துணை ஆணையர் அபிநயா மற்றும் அலுவலர் சுப்ரமணியன் ஆகியோர் தலைமையிலான 10 பேர் கொண்ட குழுவினர், கமல் சந்த்துக்கு சொந்தமான நகைக்கடை, வீட்டில் சோதனை நடத்தினர். 5 மணி நேரம் நடைபெற்ற இந்த சோதனையில், முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Exit mobile version