8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உயர்நிலைக் கல்வி படிப்பதற்கான ஊக்கத்தொகை

நெல்லை மாவட்டம் தென்காசியில் மத்திய அரசின் வருவாய் வழி மற்றும் திறன் அறிவு தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு தொடங்கப்பட்டுள்ளது. எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் உயர்நிலைக் கல்வி படிப்பதற்கான ஊக்கத்தொகை வழங்குவதற்காக மத்திய அரசு தகுதித் தேர்வை நடத்துகிறது. இந்த தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு 48 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.

இந்நிலையில் தகுதித் தேர்வில் பங்கேற்கும் மாணவர்களுக்காக தமிழக அரசின் சார்பில் தென்காசியில் இலவச பயிற்சி வகுப்பு தொடங்கப்பட்டுள்ளது. மாவட்ட கல்வி அலுவலர் சீனிவாசன் பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள், ஆசிரியர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

Exit mobile version