உதகையில் ரோஜா பூங்காவில் குவியும் சுற்றுலா பயணிகள்

உதகை, ரோஜா பூங்காவில் பூத்த குலுங்கும் மலர்களைக் காண சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்து வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம், உதகையில் உள்ள ரோஜா பூங்காவில் 4 ஆயிரம் ரகங்களில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரோஜா செடிகள் உள்ளன. சிவப்பு, ஊதா, பச்சை, வெளிர்மஞ்சள் உள்பட பல வண்ணங்களில் ரோஜா மலர்கள் பூத்து குலுங்குகின்றன. ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான ரோஜாக்கள் பூத்து குலுங்குவதைக் காண அதிகளவில் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இதனிடையே இந்த ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தல் காரணமாக உதகை ரோஜா பூங்காவில் நடைபெற உள்ள கண்காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.

Exit mobile version