குழல் இசையில் அசத்தும் கூலித்தொழிலாளி

புவனகிரி அருகே கூலித்தொழிலாளி ஒருவர் குழல் இசையில் அசத்தி வருகிறார். கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே அமைந்துள்ளது பொன்னங்கோவில் கிராமம். இக்கிராமத்தில் தன்னுடைய கேள்வி ஞானத்தினால் மட்டும் சிறப்பாக குழல் வாசித்து அசத்தி வருகிறார் சிவக்கொழுந்து என்பவர்.

சிறுவயதில் படிப்பைவிட சிவக்கொழுந்துவுக்கு குழல் வாசிப்பது பிடித்திருந்தது.தன்னுடைய முழுத்திறமையையும் குழல் வாசிப்பதிலியே செலவிட்டார்.

குடும்பத்தின் ஏழ்மையான நிலை காரணமாக, படிப்பினைவிட்டு கூலிவேலைக்கு செல்லவேண்டிய நிலை ஏற்பட்டது. கூலிவேலைக்கு செல்லும்போதும்,வேலை முடிந்து ஓய்வு நேரத்தில் மனக்கஷ்டமும், உடற்கஷ்டமும் போக குழல் ஊதுவாராம். இப்படிப்பட்ட நிலையில் இவர் தீவிர எம்ஜிஆர் ரசிகராக இருந்ததானால் சுற்றுப்புறத்தில் எங்கு அதிமுக பொதுக்கூட்டங்கள் நடைபெற்றாலும் இவரை அழைத்து எம்ஜிஆர் பாடல்களை குழல் மூலம் ஊத வைப்பார்களாம்.

வெளி உலகம் தெரியாத தனக்கு தொடர்ந்து சின்ன சின்ன வாய்ப்புக்களை வழங்கி வரும் அனைவருக்கும் ஆனந்தகண்ணீரோடு நன்றியை தெரிவிக்கிறார் சிவக்கொழுந்து.

Exit mobile version