சுற்றுலா பொருட்காட்சியில் நெருப்பில்லாமல் சமைக்கும் போட்டி

சென்னை தீவுத்திடலில் நடைபெற்று வரும் 46-வது இந்தியா சுற்றுலா பொருட்காட்சியில், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் நெருப்பில்லாமல் சமைக்கும் முறை குறித்து போட்டி நடத்தப்பட்டது.

பொதுமக்களுக்கு சமையல் குறித்தும், மாற்று முறை சமையல் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடத்தப்பட்ட இந்தப் போட்டியில் 50-க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்றனர். தமிழ்நாடு சுற்றுலா வளார்ச்சி கழகத்தின் மேலாண்மை இயக்குனர் அமுதவல்லி மற்றும் பொது மேலாளர் பாரதி ஆகியோர் தலைமையில் போட்டி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக சமையல் கலை நிபுணர் டாக்டர்.தாமு கலந்து கொண்டு போட்டியில், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்கினார். இளைஞர்களுக்கும், தற்கால தலைமுறையினருக்கும் இது போன்ற சமையல், முறைகள் உபயோகமாக இருக்கும் என்று சமையல் கலை நிபுணர் தாமு கூறியுள்ளார். 

Exit mobile version