டோக்கியோவில், கொரோனா வைரஸ் அச்சத்திற்கு இடையே ஏற்றப்பட்ட ஒலிம்பிக் ஜோதி

கொரோனா அச்சத்திற்கு இடையே ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் ஜோதி ஏற்றப்பட்டது.

உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 24-ந்தேதி முதல் ஆகஸ்டு 9-ந்தேதி வரை நடைபெறுகிறது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் இந்த போட்டி நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில், ஒலிம்பிக் ஜோதி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஒலிம்பிக் பிறந்த இடமான கிரீஸ் நாட்டின் ஒலிம்பியாவில் பாரம்பரிய முறைப்படி கிரீஸ் நடிகை ஸாந்தி ஜியார்ஜிவ் ஒலிம்பிக் ஜோதியை ஏற்றினார். கொரோனா பீதி காரணமாக இந்த நிகழ்ச்சியை காண பார்வையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை. ஒலிம்பிக் ஜோதி அடுத்த 7 நாட்கள் கிரீஸ் நாட்டில் தொடர் ஓட்டமாக எடுத்து செல்லப்படும். முதல் நபராக கிரீஸ் துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அன்ன கோராககி தீபத்தை ஏந்தி வந்தார். வரும் 19-ந்தேதி டோக்கியோ போட்டி அமைப்பாளர்களிடம் ஒலிம்பிக் ஜோதி ஒப்படைக்கப்படும்.

Exit mobile version