திருப்பூரில் திமுகவினருக்கும், காவல்துறையினருக்கும் இடையே தள்ளு முள்ளு

திருப்பூரில் நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்தில் காவல்துறையினர் கைது செய்ய முற்பட்ட போது, யார் கைதாகி செல்வது என்பது குறித்து திமுகவினரிடையே மோதல் ஏற்பட்டது.

குடியுரிமை திருத்த சட்ட மசோதாவிற்கு எதிராக திமுக இளைஞரணி சார்பில் திருப்பூர் ரயில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின் போது சட்ட மசோதாவின் நகலை திமுகவினர் கிழித்து எறிந்தனர். இதனால் காவல்துறையினர் அனைவரையும் கைது செய்ய முற்பட்ட போது, யார் கைதாகி செல்வது என்பது குறித்து திமுகவினரிடையே நடு ரோட்டில் மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து காவல்துறையினர் அவர்களை சமாதானப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Exit mobile version