திருப்பூரில் கடந்த ஆண்டு மட்டும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சாலை விபத்துக்கள்

திருப்பூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டில் நிகழ்ந்த சாலை விபத்துக்களில் மட்டும் 497 பேர் உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் வெளியாகி உள்ளது.

திருப்பூர் மாவட்ட காவல்துறை வெளியிட்ட தகவலில், கடந்த ஆண்டு இரண்டாயிரத்து 309 சாலை விபத்துக்கள் நடந்ததாக கூறியிருக்கிறது.கவனக்குறைவு காரணமாக அதிகளவு விபத்துக்கள் நடந்ததாகவும், மொத்தமாக 497 பேர் பலியானதாகவும் தெரிவித்துள்ளது. பின்னலாடை துறையில் முக்கிய பங்கு வகிக்கும் திருப்பூரில், வாகன போக்குவரத்து அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே வாகன ஓட்டிகள் சாலை மற்றும் போக்குவரத்து விதிகளை மதித்து கவனமாக  வாகனங்களை ஓட்டவேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Exit mobile version