திருப்பூர், புரட்டாசி மாத பிறப்பை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு பூஜை

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள கிருஷ்ணன் கோவிலில் புரட்டாசி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

நவநீத கிருஷ்ண சுவாமி கோவிலில், பெருமாளுக்கு பால், தயிர், நெய், இளநீர் என பல்வேறு திரவியங்களில் சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில், ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் சீனிவாச பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். உடுமலையை சுற்றியுள்ள அனைத்துபெருமாள் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றதை தொடர்ந்து பக்தர்கள் விரதமிருந்து தாசர்களுக்கு படி அரிசி, காய்கறிகள் அளித்து வழிபட்டனர். புரட்டாசி முதல் நாளில் ஏராளமான பக்தர்கள் பெருமாள் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தனர்.

Exit mobile version