திருப்பூரில் பாஜக, மதிமுக தொண்டர்கள் மோதல்

திருப்பூரில் பாஜக மற்றும் மதிமுக தொண்டர்கள் இடையே ஏற்பட்ட மோதலால் பரபரப்பான சூழல் எழுந்தது. திருப்பூரில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் அக்கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது பாஜக மகளரணியை சேர்ந்த பெண்மணி ஒருவர் மதிமுகவுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த மதிமுக தொண்டர்கள் அப்பெண் மீது தாக்குதல் நடத்தினர்.

இதையடுத்து, பாஜக மற்றும் மதிமுக தொண்டர்கள் இடையே ஏற்பட்ட மோதலால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், பாஜகவின் பெண் தொண்டரரை மீட்டு, நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

Exit mobile version