திருப்பூரில் , ஒரு ரூபாய் செலுத்தினால் 3 அடுக்கு முகக்கவசம் வரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இயந்திரம்…

திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் 100க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். அதேசமயம், அலுவல் பணிகள் தொடர்பாக அதிக அளவிலான பொதுமக்களும் வந்து செல்கின்றனர். இந்த நிலையில், மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பொதுமக்களுக்கு முகக்கவசம் வழங்குவதற்காக தானியங்கி இயந்திரம் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. இந்த இயந்திரத்தில் 1ரூபாய் நாணயத்தை செலுத்தினால் 3 அடுக்கு முகக்கவசம் வரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இயந்திரத்தின் மூலம் குறைந்த விலையில் முகக்கவசங்கள் வழங்குவது, முகக்கவசம் அணியும் பழக்கத்தை அதிகரிக்கும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Exit mobile version