திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருவிழாவுக்காக பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு பந்தக்கால் நடும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது.

உலக பிரசித்தி பெற்ற அண்ணாமலையார் கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் கார்த்திகை தீபத்திருவிழா விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டிற்கான தீபத்திருவிழா டிசம்பர் மாதம் 10ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதற்கான பூர்வாங்க பணிகளுக்காக சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்ட பிறகு பந்தாக்கால் ராஜ கோபுரம் முன்பு கொண்டு வரப்பட்டது. அதன் பிறகு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க பந்தக்கால் நடப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கந்தசாமி மற்றும் பக்தர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Exit mobile version