பல்வேறு கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தனர்

தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகிய 500க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர்.

சுற்று வட்டாரப்பகுதியில் உள்ள ஊராட்சி மன்ற தலைவர்கள் முன்னிலையில் திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளில் இருந்து விலகிய சுமார் 500க்கும் மேற்பட்டோர் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். கட்சியில் இணைந்தவர்களை அமைச்ச்சர் உற்சாகத்தோடு வரவேற்றார்.  இதுவரை தர்மபுரி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலுக்குப் பிறகு 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அமைச்சர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version