பெசன்ட் நகரில் மறு பயன்பாட்டிற்கு உகந்த தரமான பொருட்கள் சேகரிப்பு மையம் அமைப்பு

சென்னை மாநகராட்சியின்  சார்பில் மறு பயன்பாட்டிற்கு உகந்த தரமான பொருட்கள் சேகரிப்பு மையம் பெசன்ட் நகரில் அமைக்கப்பட்டுள்ளது.

மக்களுக்கு பொதுசுகாதாரத்தையும் .தூய்மையையும் உறுதிப்படுத்தும் பல்வேறு பணிகளை சென்னை மாநகராட்சி தொடர்ச்சியாக செய்துவருகின்றது,வீட்டிற்கே சென்று மக்கும் குப்பைகளையும் மக்காத குப்பைகளையும் தரம் பிரித்து சேகரித்து, நகரின் சுகாதாரத்தை  பேணிவருகின்றனர்,இந்நிலையில் தரமான குப்பைகளை மறு பயன்பாட்டிற்கு கொண்டு வரும் நோக்கத்தில்
 மாநகராட்சியின் சார்பில் சென்னை பெசன்ட் நகரில் குப்பை சேகரிப்பு மையத்தை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தொடங்கிவைத்தார். வீடுகளில் நல்ல நிலையில் இருக்கும் உபயோகமற்ற பொருட்களை இங்கு நேரில் வந்து விற்பணைக்கு
கொடுக்கலாம் என்றும் ,இதனால் வீண் குப்பைகள் உருவாவது தடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

Exit mobile version